1. இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் இராஜேந்ர பிரசாத் ஆவார்.
2. மகாத்மா காந்தியடிகள் நமது பாரத நாட்டின் முதன் முதலாக தொடங்கிய அரசியல் போராட்டத்தில் பங்கு கொண்டவர் என்ற சிறப்பும், பெருமையும் இராஜேந்திர பிரசாத் அவர்களுக்குண்டு.
3. மகாத்மா காந்தி விடுதலைப்போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்திருந்த சமயம் டாக்டர் இராஜேந்திர பிரசாதின் சொந்த மாநிலமான பீகாருக்கு சென்றிருந்தார்.
4. பீகார் மாநிலம் சம்பரான் என்ற பகுதியில் உள்ள நிலத்தில் பெரும்பகுதி நில குத்தகை மீது வெள்ளையர் மேலாதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களுக்கு அக்காலத்தில் சாயம் தயாரிக்க அவுரிச்செடி தேவைப்பட்டது.
5. ஒரு ஏக்கர் நிலத்தில் ஆறில் ஒரு பங்கு நிலத்தில் அவுரிச்செடி பயிரிட அப்பகுதி விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர். அவுரியை பயிரிடத்தவறிய விவசாயிகள் விவசாயம் செய்யும் உரிமையை இழப்பார்கள் என்று அச்சுறுத்தப்பட்டனர்.
6.மேலும் விவசாயிகளுக்கு உரிய ஊதியம் முறையாக தரப்படுவதில்லை மற்றும் வெள்ளையர்களின் அடக்கு முறைக்கு உள்ளாகுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளானார்கள்.
7.இச்செய்தி அன்று இராஜேந்திரப்பிரசாத் அவர்களின் வீட்டில் தங்கியிருந்த காந்திஜியின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க காந்திஜி முடிவுசெய்தார்.
8. வழக்கறிஞரான இராஜேந்திரப்பிரசாத்தும் காந்திஜியும் அவரது தொண்டர்களும் சேர்ந்து சட்ட ரீதியான போராட்டம் மூலம் இப்பிரச்சனைகளை தீர்த்து விழசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும் உரிமையையும் வழங்க அரசாங்கமே ஒரு சட்டம் இயற்ற வழிவகை செய்தனர்.
9.அன்றிலிருந்து இராஜேந்திர பிரசாத்துக்கும் காந்தியடிகளுக்குமான தொடர்பு மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தியது.
10. 1920 ம் ஆண்டில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை துவங்கினார். அந்த இயக்கத்தில் பங்கேற்க தனது வழக்கறிஞர் தொழிலையே துறந்தார்.
11. 1946ல் இடைக்கால அமைச்சரவை ஏற்பட்டது. இராஜேந்திர பிரசாத் உணவுத்துறை அமைச்சரானார்.26.01.1950 ல் இந்தியா முழு குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.
12. இராஜேந்திர பிரசாத் முதல் குடியரசுத்தலைவர் ஆனார்.